tamilni 74 scaled
இலங்கைசெய்திகள்

நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்

Share

நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றமை தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாங்கள் எந்தவொரு தீர்மானம் தொடர்பிலும் ஆராயவில்லை.

ஆனால் பொதுவாக இந்த விடயம் எங்களுடைய நீதித்துறைக்கு மிகப்பெரிய ஒரு கரும்புள்ளி என்று சொல்லலாம்.

குறிப்பாக, தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் இந்த நாட்டினுடைய இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றார் என்றால் இதுதான் முதன்முறையாக கேள்விப்பட்டிருக்கின்றோம்.

உண்மையில் இந்த விவகாரத்தில் சில சில வழக்குகளுக்கு அழுத்தங்கள் வந்ததாக எல்லாம் ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது. சனல் 4இல் வந்த விடயங்களிலும் இவ்வாறு நீதித்துறைக்கு எதிராக சில சில அழுத்தங்கள் தொடர்பில் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இதன் காரணமாகத்தான் நாங்கள் கூறுகின்றோம், இவ்வாறான விடயங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியம் வேண்டும் என்று என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...