tamilni 74 scaled
இலங்கைசெய்திகள்

நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்

Share

நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி – சாணக்கியன்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றமை தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாங்கள் எந்தவொரு தீர்மானம் தொடர்பிலும் ஆராயவில்லை.

ஆனால் பொதுவாக இந்த விடயம் எங்களுடைய நீதித்துறைக்கு மிகப்பெரிய ஒரு கரும்புள்ளி என்று சொல்லலாம்.

குறிப்பாக, தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் இந்த நாட்டினுடைய இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றார் என்றால் இதுதான் முதன்முறையாக கேள்விப்பட்டிருக்கின்றோம்.

உண்மையில் இந்த விவகாரத்தில் சில சில வழக்குகளுக்கு அழுத்தங்கள் வந்ததாக எல்லாம் ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது. சனல் 4இல் வந்த விடயங்களிலும் இவ்வாறு நீதித்துறைக்கு எதிராக சில சில அழுத்தங்கள் தொடர்பில் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இதன் காரணமாகத்தான் நாங்கள் கூறுகின்றோம், இவ்வாறான விடயங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியம் வேண்டும் என்று என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...