rtjy 114 scaled
இலங்கைசெய்திகள்

ஐரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையர்

Share

ஐரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையர்

இத்தாலியில் 60 யூரோக்கள் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையர் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடத்தி செல்லப்பட்ட தனது காதலியை விடுவிக்குமாறு கோரி காதலன் பொலிஸாரிடம் உதவி கேட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த கடத்தலில் ஈடுபட்ட 40 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டு, கடத்தல் மற்றும் கப்பம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தம்பதியினர் தங்கள் காரை நிறுத்தியுள்ளனர். இதன் போது இலங்கையர் காரணமின்றி அந்த தம்பதியிடம் பணம் கேட்டு, தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆணும் பெண்ணும் பணம் செலுத்த எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், காரில் இருந்த பெண்ணை இறங்கச் செய்து, தன்னுடன் அழைத்துச் சென்று இலங்கையர் அச்சுறுத்தியுள்ளார்.

கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றுமாறு கண்ணீருடன் காதலன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் காதலியின் கையடக்க தொலைபேசி ஊடாக இலங்கையர் தங்கியிருந்த இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....