rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

பயணப் பாதையை மாற்றிய ரணில்

Share

பயணப் பாதையை மாற்றிய ரணில்

மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்வதை தவிர்த்து ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம்(07.10.2023) மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், அந்த வீதியால் பெருமளவான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அடிக்கடி ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் போராட்டத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

இதன்போது உடனடியாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் செல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...