இலங்கை

இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

Published

on

இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த இந்திய நிறுவனம், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கை இறக்குமதியாளர், அத்துடன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட துறைமுகம் பற்றிய விபரங்களைக் கேட்டு இந்த இந்திய நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

அத்துடன் இந்தியாவின் மத்திய, மாநில மற்றும் பிராந்தி உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்திய சுங்கம் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக முறையிடப்படும் என்றும் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

உண்மையான ஏற்றுமதியாளர்களின் நற்பெயரைக் காப்பாற்ற இதுபோன்ற வேண்டுமென்றே மோசடி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று குறித்த இந்திய நிறுவனம் கேட்டுள்ளது.

அத்துடன் இந்த இந்த தயாரிப்புகளை தாங்கள் இதுவரை எந்த தரப்பினருக்காகவும் உற்பத்தி செய்யவில்லை அல்லது ஏற்றுமதி செய்யவில்லை என்றும் இந்திய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இம்யூனோகுளோபுலினை யார் கொள்வனவு செய்தார்கள் என்பதைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று மருத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Exit mobile version