rtjy 96 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

Share

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

தென்னிலங்கைக்கு சென்று முல்லைதீவு நீதிபதியை காட்டிக்கொடுத்துவிட்டு தனது அரசியல் முகவரியை தக்கவைத்துக்கொள்ளவே மனிதச்சங்கிலி போராட்டத்தில் சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை சட்ட மா அதிபர் அழைத்து, அச்சுறுத்தியது மாத்திம் அல்லாமல் தீர்ப்பை மாற்றுமாறு அச்சுறுத்தல் கலந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றார்.

இவற்றுக்கு அடி பணியாத காரணத்தினால் நீதிபதியின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது எனவும் சுகாஸ் கூறினார்.

குருந்தூர் மலை விவகாரத்தில் சரத் வீரசேகர அங்கு சென்று நீதிபதியோடு உரையாட முற்பட்டது சரியான விடயம் அல்ல. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிக்கு அவர் அச்சுறுத்தலையே விடுத்தார். ஆனால் பொலிஸார் சரத் வீரசேகரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றும் சுகாஸ் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...