rtjy 85 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது

Share

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது

இலங்கை அரசு விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என ஊடகங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒரு தரப்பினர் இந்த அரசில் அங்கம் வகிக்கின்றனர்.

அதேவேளை, மற்றொரு தரப்பினரை இந்த அரசு பாதுகாத்து வருகின்றது.

இப்படியான அரசு எப்படி சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமாட்டோம் என்று வெளிநாடுகளுக்கும், சர்வதேச அமைப்புக்களுக்கும் எவ்வாறு சவால் விட முடியும்?

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கமாட்டேன் என்று கூறினாலும், இறுதியாகப் பதவிகளில் இருந்த மூன்று ஜனாதிபதிகளும் (மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச) சர்வதேசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பானவர்கள்.

தற்போது அவர்கள் யாரின் பாதுகாப்பில் உள்ளார்கள்? எனவே, தற்போது ஜனாதிபதிப் பதவியில் இருப்பவரும், அவர் தலைமையிலான அரச தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
5bb31f57 563f 403c 81e7 2b351f640391 16x9 1200x676
செய்திகள்உலகம்

போரின் விளிம்பில் ஈரான்: ரியால் வரலாறு காணாத வீழ்ச்சி – மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிப்பு!

ஈரானின் தேசிய நாணயமான ரியால் (Rial), அமெரிக்க டொலருக்கு நிகராக 1.5 மில்லியன் என்ற அதலபாதாள...

MediaFile 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை: பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிய சந்தேகநபர்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைப்...

image 870x 6764441226ca0
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு: 2026-ல் 220 பில்லியன் ரூபாய் மேலதிக செலவு – அமைச்சரவை அறிவிப்பு!

மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக...

sL workers
செய்திகள்இலங்கை

2026-ல் 3.1 லட்சம் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: குவைத் முதலிடம்!

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணியமர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வெளிநாட்டு...