tamilni 56 scaled
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு தொடரும் கிரிக்கெட் வீரர்

Share

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு தொடரும் கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் போது தனுஷ்க குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் இரவு அவர் நாடு திரும்பியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் சட்ட திட்டங்களுக்கு அமைய தமக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணிடம் நஷ்ட ஈடு கோர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக சிவில் வழக்கு ஒன்றை தொடர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் ஊடாக தமது வழக்கிற்கு செலவான பணத்தை நட்ட ஈடாக பெற்றுக்கொள்ள உத்தேசித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண மற்றும் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனமை குறித்து வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் பயிற்சிகளுக்கு திரும்ப உள்ளதாகவும் இன்னமும் விளையாடுவதற்கு விருப்பம் உள்ளது எனவும் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

மிக நெருக்கடியான காலத்தில் தமக்கு உதவிய தாம் குற்றமற்றவர் என நம்பிக்கை கொண்டிருந்த அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...