tamilni 57 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்

Share

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவ்வப்போது சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதன் பின்னணி சமகால ஆட்சியை உறுதிப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கள பத்திரிகை ஒன்று பசில் ராஜபக்சவுடன் நடத்திய கலந்துரையாடலில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள உண்மைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபச்வுக்கு எதிரான கோஷசங்கள் அரசாங்கத்திற்குள் எழுந்ததாக பசில் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பதவி விலக்குமாறு அதிகளவான அமைச்சர்கள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போராட்டத்திற்கு முன்னரே கணிக்கப்பட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு கோட்டாபய நியமித்தமை சரியானது எனவும், பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு தற்போது ஜனாதிபதியாக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியின் மூலம் தனது அந்த முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டதாக பசில் தெரிவித்துள்ளார்.

134 உறுப்பினர்களினதும் வாக்குகளை அவர் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் கட்சி முழுமையாக பசில் ராஜபக்சவின் தலைமை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...