rtjy 299 scaled
இலங்கைசெய்திகள்

வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு

Share

வரி அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் கடுமையான நிலைப்பாடு

நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய அன்றையதினம் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன் ஆயத்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அப்போதும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல தடவைகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரியை மேலும் அதிகரிக்குமாறு கூறுகின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் அரசின் வருமானம் போதவில்லை என்பதாகும்” என அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

எங்களால் இனியும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த முடியாது. நாங்கள் அதிகபட்சமாக சுமையை ஏற்றியுள்ளோம். அரசின் வருவாய் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களிடம் நாங்கள் அந்த விடயங்களை தெளிவுபடுத்துவோம்.

என்ன செய்தாலும் இனி வரியை உயர்த்த முடியாது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...