Connect with us

இலங்கை

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

Published

on

rtjy 317 scaled

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கிளர்ச்சி காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண், தாம் தொடர்ந்தும் இலங்கையில் தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 மாதங்கள் மறைந்திருந்த நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான Kayleigh Fraser, இலங்கையில் தங்கியிருந்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடியேற்ற அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அவர் தவறான விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினார்.

Fraser, தனது இன்ஸ்டாகிராமில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை பகிரத் தொடங்கிய பின்னரே, அதிகாரிகள் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்தல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாக Fraser கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃப் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய்ன் நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது Fraser இலங்கை நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய உத்தரவாதங்கள் வழங்கப்படும், தாம் மறைவிலிருந்து வெளியே வர முடியாது என்று Fraser கூறியுள்ளார். இலங்கையில் தற்போது தாம் வாழும் வாழ்க்கையை வாழ்க்கையாக அங்கீகரிக்கவில்லை.

இங்கே அதிகாரத்தில் இருக்கும் இந்த பைத்தியக்காரர்களின் தயவில் ஒட்டுமொத்த உலகமும் தம்மை கைவிட்டது போல் தாம் உணர்வதாக Fraser தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.01.2025, குரோதி வருடம் தை மாதம் 3, வியாழக் கிழமை,...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 15.01.2025, குரோதி வருடம் மார்கழி 2, புதன் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.01.2025 குரோதி வருடம் மார்கழி 29, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 12 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.01.2025, குரோதி வருடம் மார்கழி 28 ஞாயிற்று கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு...