rtjy 293 scaled
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

Share

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று(28.09.2023) முதல் ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் போது பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இதனை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...