tamilni 369 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி தகவல்

Share

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி தகவல்

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த தனது தோழி சிங்கபூருக்கு சுற்றுலா சென்ற வேளையில் கணவனால் படுகொலை செய்யப்பட்டதாக அவரது தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை பெண் பலருக்கு தோழியாகவும், எப்போதும் அன்பான வார்த்தைகளையும் புன்னகையையும் கொண்டவர் என தோழியால் அன்புடன் நினைவுகூரப்பட்டார்.

எலிசபெத் கேம்பர் என்பவர் தனது வகுப்புத் தோழியான செவ்வந்தி மதுகா என்ற கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் மரணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் வகுப்பு தோழிகளாகும்.

கடந்த 9 ஆம் திகதி Holiday Inn Express Singapore Katong இல் இலங்கை பெண் அவரது கணவர் ஈஷான் என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வந்தி சிங்கப்பூரில் விடுமுறையில் இருந்தபோது, இந்த சோகம் நடந்ததாக மெல்பேர்னில் அமைந்துள்ள அவரது பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து இருந்த பின்னர் தனது கணவருடன் விடுமுறையில் செல்வதில் செவ்வந்தி மிகவும் உற்சாகமாக இருந்ததாக தோழி குறிப்பிட்டார்.

32 வயதான இவர், அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த நிலையில், அவரது கணவர் இலங்கையில் பணிபுரிந்து வந்ததாக கேம்பர் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...