rtjy 257 scaled
இலங்கைசெய்திகள்

மக்களை அடக்கவே புதிய சட்ட அறிமுகம்: சாணக்கியன்

Share

மக்களை அடக்கவே புதிய சட்ட அறிமுகம்: சாணக்கியன்

மக்களை அடக்குவதற்கே இலங்கை அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஒன்லைன் சேப்டி கொமிஷன் என்பது, நாட்டினுடைய ஜனாதிபதி இந்த கொமிஷன் சபைக்கு ஐந்து பேரை நியமிப்பார்.

அந்த ஐந்து பேருக்கும் மக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பார்கள். அதில் வருகின்ற முறைப்பாட்டை ஆராய்ந்து பார்த்து உரிய இடத்திற்கு தெரியப்படுத்தி அதனை அகற்றாவிட்டால் குறித்த நிறுவனத்தை இரத்து செய்ய முடியும் இல்லாவிட்டால் தண்டப்பணம் அறவிட முடியும்.

இவ்வாறான சட்டம் வருமாக இருந்தால் இந்த ஐந்து பேரும் மாத்திரமே எது உண்மை எது பொய் என அறிவிப்பார்கள். அவ்வாறான நிலை ஏற்படப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களுடைய குறைபாடுகளை ஐந்து பேர் மாத்திரமே சொல்லக்கூடிய நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது சாத்தியப்படுமா என்ற எமக்குத் தெரியாது என்றும் இது ஜனநாயக விரோத செயல்.

இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான எவ்வித கருத்துக்களும் சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்ய முனைகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...