rtjy 234 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்

Share

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்

இலங்கையை விட்டு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக நீதிமன்றத்தினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள மூவரும், இலங்கை கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனையிட்ட குடிவரவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வென்னப்புவ உதசிரிகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 49 வயதான சுஜீவ பிரசன்ன பெர்னாண்டோ என்பவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு இத்தாலிக்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் கைது செயயப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு சிறிய விடுமுறைக்காக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

மேலும், மன்னார் சிலாவத்துறை நீதவான் நீதிமன்றம், நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினரால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த மூவர், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...