tamilni 214 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சனல் 4 காணொளியால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடி

Share

சனல் 4 காணொளியால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடி

சனல் 4 விவகாரம் தொடர்பில் ராஜபக்சக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பதும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவொன்றை நியமித்துள்ளமையும் ஒன்றுக்கொன்று முரணானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டை மறுத்த போது அது தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தாரா? என முஜுபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளமை ஜனாதிபதிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பிய முஜுபுர் ரஹ்மான், அதற்கான அறிவிப்பை தாம் வெளியிட்டதாக பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இந்த முரண்பாடான நடத்தை விடயத்தில் முறனான இரண்டு கருத்துக்கள் இருப்பதையே காட்டுகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின் போது அவர்மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை நிராகரித்தவர் பாதுகாப்புச் செயலாளர் என இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...