அரசியல்இலங்கைசெய்திகள்

சனல் 4 காணொளியால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடி

tamilni 214 scaled
Share

சனல் 4 காணொளியால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடி

சனல் 4 விவகாரம் தொடர்பில் ராஜபக்சக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பதும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவொன்றை நியமித்துள்ளமையும் ஒன்றுக்கொன்று முரணானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டை மறுத்த போது அது தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தாரா? என முஜுபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளமை ஜனாதிபதிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பிய முஜுபுர் ரஹ்மான், அதற்கான அறிவிப்பை தாம் வெளியிட்டதாக பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இந்த முரண்பாடான நடத்தை விடயத்தில் முறனான இரண்டு கருத்துக்கள் இருப்பதையே காட்டுகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின் போது அவர்மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை நிராகரித்தவர் பாதுகாப்புச் செயலாளர் என இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...