rtjy 185 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Share

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 2021/2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பன தொடர்பில் காணப்பட்ட இடநேர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பவற்றுக்கான சாத்தியப்பாடு நடுத்தர அளவில் இதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடநேர்வு அறிக்கையானது இலங்கையில் பதிவான பணம் தூயதாக்கல் முறைமைகள், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல், இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், இத்தகைய செயற்பாடுகளுக்கான இடர்நேர்வுகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

இம்மதிப்பீட்டின் பிரகாரம் போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அவற்றுக்கு மேலதிகமாக மோசடிகள், கொள்கை, சூழல் மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த குற்றங்கள், ஆட்கடத்தல், வரிக்குற்றங்கள், சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் என்பனவும் பணம் தூயதாக்கலுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு, நாட்டில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்க நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிரான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...