rtjy 145 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் 9 சதவீதமான நன்மைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படமாட்டாது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.

வங்கிகளிடமிருந்து 30 சதவீத வரியை அறிவிடும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

கடன் மறுசீரமைப்பு நடைமுறையின் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டிவீதங்கள் குறைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...