tamilni 157 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் இளம் தம்பதி கைது

Share

தென்னிலங்கையில் இளம் தம்பதி கைது

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கியால் சுட்டு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கூரிய ஆயுதத்தால் வெட்டிய குற்றத்திற்காகவும் தேடப்பட்டு வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் கொலைக்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட காரில் பயணித்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும் அவரது மனைவி 23 வயதுடையவர் எனவும் அவர்கள் வாடிகல, ரன்ன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​ஹம்பாந்தோட்டை மற்றும் ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 03 மாடு திருட்டு குற்றங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு ஹம்பாந்தோட்டை மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் 06 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...