tamilni 158 scaled
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை: கொழும்பு சென்றவர் பலி

Share

தொழிற்சங்க நடவடிக்கை: கொழும்பு சென்றவர் பலி

ஹொரபே பிரதேசத்தில் தொடருந்தின் கூரை மீது ஏறி பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் கூரையில் ஏறி பயணித்த பயணி ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த பயணி கண்டியில் இருந்து கோட்டைக்கு அலுவலக தொடருந்தில் ஏறியதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டமையினால் கிடைத்த தொடருந்தில் பயணிக்க முயற்சித்தவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொடருந்து சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தற்போது பல தொடருந்துகள் இரத்து மற்றும் தாமதம் ஏற்படுவதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...