tamilni 171 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நான்கு பேருக்கு மரண தண்டனை

Share

இலங்கையில் நான்கு பேருக்கு மரண தண்டனை

இலங்கையில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றதினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி களுத்துறை மதினகந்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏழு பேருக்கு எதிராக சட்டமா அதிபர், களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் முதலாம் இரண்டாம் மூன்றாம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும் வழக்கின் 6ஆம் மற்றும் பிரதி7ஆம் பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதி வழக்கு விசாரணைகளின் போது உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
15
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்: ஏப்ரலுக்குப் பிறகாவது நீதி உறுதி – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வாக்குறுதி!

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போதைய...

14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரண தண்டனை அமுலாகுமா? – அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித...

13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

12
செய்திகள்அரசியல்இலங்கை

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் நிகழ்வுகள் ரத்து: ஜனநாயகம் அடக்கப்பட்டுவிட்டது – அலி சப்ரி கடும் விசனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union)...