இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

rtjy 118 scaled
Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமிக்கப்படவுள்ளன என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் ஏமாற்று நாடகமே அரங்கேற்றப்படும். சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மிகவும் முக்கிய ஆவணம்.

சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும். அதைவிடுத்து இங்கு நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். குற்றவாளிகள் உள்ள இடத்தில் நீதியை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே, சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும்” என்றார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...