rtjy 113 scaled
இலங்கைசெய்திகள்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினரை நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் கொழும்பு நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டை ஞானசார தேரர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜாதிக்க பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரரினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஊடக சந்திப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து இடையூறு விளைவித்தனர் என ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஞானசார தேரர் மற்றும் அவருடன் ஊடக சந்திப்பிற்குள் பிரவேசித்த தரப்பினரை நீதிமன்றம் 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாடு செய்த தரப்பினருக்கு இந்த நட்டஈட்டை வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான குற்றச்செயல்களை மீண்டும் இழைக்கக்கூடாது என நீதவான் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருந்த மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...