rtjy 113 scaled
இலங்கைசெய்திகள்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினரை நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் கொழும்பு நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டை ஞானசார தேரர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜாதிக்க பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரரினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஊடக சந்திப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து இடையூறு விளைவித்தனர் என ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஞானசார தேரர் மற்றும் அவருடன் ஊடக சந்திப்பிற்குள் பிரவேசித்த தரப்பினரை நீதிமன்றம் 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாடு செய்த தரப்பினருக்கு இந்த நட்டஈட்டை வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான குற்றச்செயல்களை மீண்டும் இழைக்கக்கூடாது என நீதவான் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருந்த மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...