tamilni 139 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்

Share

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக இலங்கைக்கு வரவழைப்பதற்கு, மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர்தரத்தில் காணப்பட வேண்டும்.

எமது சுகாதார கொள்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் வைத்தியசாலை கட்டமைப்பு, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன. பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

எனவே, அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கும் வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் இன்மையால், பிரித்தானியா தமது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, இலங்கையும் பிரித்தானியாவின் வைத்தியசாலை கட்டமைப்பை நடத்திச் செல்கிறது.

அதன்படி, உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...