இலங்கைசெய்திகள்

விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

tamilni 54 scaled
Share

விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

தலங்கமவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மருத்துவ உளவியலாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுஜாதா முனசிங்க மானாபரன என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 26ஆம் திகதி ஆண் ஒருவருடன் விடுதிக்கு வந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவருடன் விடுதிக்கு வந்த ஆண் நபர் நேற்று விடுதியை விட்டு வெளியேறி இரவு மீண்டும் வந்ததாகவும் மீண்டும் வெளியே சென்றாரா என்பது நினைவில் இல்லை என விடுதி காசாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் முதல் பெண்ணை காணாததால், விடுதி பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, ​​படுக்கையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடந்த 24 அல்லது 25 ஆம் திகதி குறித்த பெண் விடுதிக்கு வந்தபோது, ​​தன்னிடம் அடையாள அட்டை இல்லை எனவும், ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட அடையாள அட்டை இலக்கத்தை காசாளரிடம் கொடுத்ததாகவும் அது போலியானதெனவும் தெரியவந்துள்ளது.

1977 என எழுதப்பட்டிருந்தாலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது பயணப் பையில் இருந்த முகவரியொன்றை பரிசோதித்த போது அது ஹப்புத்தளை பகுதியில் உள்ள தங்கும் விடுதியொன்றிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் மருத்துவ உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படும் செய்தி அறிக்கைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

விடுதியில் உள்ள சிசிடிவி கமராக்களும் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அது இயங்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...