tamilni 60 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

Share

ஈஸ்டர் தாக்குதல்:நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி

சூம் தொழில்நுட்பம் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் முன்வைத்த கூற்று தமக்கு மட்டுமன்றி தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான சுரேஷ் சலே கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.

நற்பெயருக்கும் மற்றும் உத்தியோகபூர்வ கடமைக்கும் பெரும் பாதிப்பாக அமைவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து நிறுத்துவதற்கும் நேரலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவு பிரதானியான சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சர்வதேச உண்மைக்கான பேரவை மூலம் 2021 அக்டோபர் 23ஆம் திகதி சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட கூட்டத்தில் தம்மைப் பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் தமக்கு ஏற்பட்ட அப கீர்த்திக்காக சிறில் காமினி அடிகளாரிடம் 30 மில்லியன் ரூபா நட்ட ஈடாக பெற்றுத் தருமாறும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....