rtjy 49 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05.09.2023) கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி இன்றிரவு ஒளிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னுரையை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஊடகப்பேச்சாளர் மற்றும் நிதி பரிபாலகராக செயற்பட்டதாகக் கூறப்படும் ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரும் மற்றுமொரு அரச உயரதிகாரி ஒருவரும் வாக்குமூலமளிக்கும் வகையில், இந்த முன்னுரை காணொளி அமைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளதாக ஹன்சீர் அசாத் மௌலானா இதில் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையை சீர்குலைத்து ராஜபக்சவை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரிக்கும் நோக்கில், 2018 ஆம் ஆண்டு உயர் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, ISIS-உடன் இணைந்த குண்டுதாரிகள் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவைப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயம்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...