tamilni 27 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன்

Share

இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த இத்தாலி தம்பதியை இலங்கை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.

இலங்கையின் அழகை ரசிக்க வந்த தம்பதி நாட்டை விட்டு வெளியேறும் போது உடன் இருந்த இளம் சுற்றுலா வழிகாட்டியிடம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளனர்.

குறித்த தம்பதி வழிகாட்டிய இளைஞன் ஒருவரை கட்டி அணைத்து உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் நம்பகமான தரமான சேவையை வழங்கிய இலங்கை இளைஞன், இத்தாலிய தம்பதியினரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

குறித்த இத்தாலி தம்பதி காலி, மிரிஸ்ஸ, யால தேசிய பூங்கா, எல்ல, கண்டி, சிகிரியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இலங்கை வருகை தந்தனர்.

அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக 26 வயதான லஹிரு தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் செயற்பட்டுள்ளார்.

அந்த இளைஞனிடம் விடைபெறும் நேரத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகரமான தருணம், இந்த நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு நபர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...