rtjy 14 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

Share

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக வேண்டும் என்று சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

மகிந்த மற்றும் ரணிலால் இணைந்து செயற்பட முடியுமென்றால், அநுர, சஜித்தால் ஏன் இணைந்து செயற்பட முடியாது?

ஒன்று சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர், அவ்வாறு இல்லாவிட்டால் அநுர ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடனேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

அதற்குச் சுதந்திர மக்கள் சபையின் ஆதரவும் வழங்கப்படும். தனித்துச் செயற்படுவதைவிட கூட்டாகச் செயற்படுவதே சிறந்தது என்றார்.

Share
தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...