rtjy 9 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர்

Share

யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர்

யாழில் கெப் ரக வாகனம் மற்றும் ஒன்றரை கோடி ரூபா பணம் என்பவற்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பகுதியில் கடந்த 29, 30ஆம் திகதிகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

கெப் வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி பொருத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேகநபர்களை கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார்சைக்கிள் மற்றும் 15 மில்லியன் (1.5 கோடி) ரூபா பணம் என்பன மீட்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...