rtjy 297 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையுடன் இராணுவ உறவுகளையும் வலுப்படுத்தும் இந்தியா

Share

இலங்கையுடன் இராணுவ உறவுகளையும் வலுப்படுத்தும் இந்தியா

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இருதரப்பு இராணுவ உறவுகளையும் வலுப்படுத்துவதற்காகவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு செல்லவுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் ‘உளவு’ கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்தப்படுவதை தொடர்ந்தே அவரின் இந்த பயணம் ஒழுங்குச்செய்யப்பட்டுள்ளது என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் ராஜ்நாத்சிங் எதிர்வரும் செப்டம்பர் 2,3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளார்.

மேலும், இருதரப்பு இராணுவ திறனை வளர்ப்பதில் இலங்கை ஆயுதப் படைகளுக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்ட ஒரு இந்திய அதிகாரி ஒருவர், இதற்காக இந்தியா 150 மில்லியன் டொலர் பாதுகாப்புக் கடனை நீடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த திட்டதிற்கு இதுவரை சுமார் 100 மில்லியன் டொலர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...