tamilni 402 scaled
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை!

Share

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் மீள் வரைவு செய்யும் வகையில், சட்ட வரைஞரை அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 27.02.2023 அன்று அமைச்சரவை கூட்டத்தின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அரச வரைஞர் தயாரித்த வரைவு யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும் வரைவு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உட்பிரிவுகளில் ஆர்வமுள்ள பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு குறித்த வரைவு சட்டமூலத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே வரைந்த வரைவு யோசனையில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களை இணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை மறுவடிவமைக்க சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...