rtjy 258 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு மரணம்!

Share

கொழும்பு வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு மரணம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருப்பினும் குறித்த நபர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) விசாரணை நடத்தப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதுவரை குறித்த தடுப்பூசியை நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் வெட்டுக்காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெட்டு காயத்திற்காக “Co-Amoxi-Clove” எனும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோய் எதிர்ப்பு தடுப்பூசியை விடுதியில் உள்ள பல நோயாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த மருந்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் விசாரணை முடிவடையும் வரை இந்த தடுப்பூசியை கொழும்பு தேசிய வைத்தியசாலை பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த நோயாளியின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...