3 14 scaled
உலகம்செய்திகள்

ரயில் பெட்டி தீ விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கைது

Share

ரயில் பெட்டி தீ விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கைது

தமிழக மாவட்டம், மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி லக்னோ – ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, ரயிலில் சட்டவிரோதமாக சமையல் சிலிண்டர் மூலம் தேநீர் சமைக்க முயன்ற போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென லக்னோ பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை தமிழகம் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...