rtjy 247 scaled
இலங்கைசெய்திகள்

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

Share

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

இலங்கை கடவுச்சீட்டில் போலி கனேடிய வீசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நபரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதன்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது.

42 வயதான அந்த நபர் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL225 விமானத்தில் பயணம் செய்ய முயன்றுள்ளார்.

இதன் போது விமான ஊழியர்கள் அவரது கனேடிய விசா குறித்து சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலைய எல்லை கண்காணிப்பு பிரிவில் குடிவரவுத் துறையின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட கனேடிய விசா போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் பயணியின் இலங்கை கடவுச்சீட்டு உண்மையானது எனவும் அவர் வத்தளையில் உள்ள ஒரு நபரிடம் இருந்து 4.5 மில்லியன் ரூபாய்க்கு போலி கனேடிய விசாவைப் பெற்றுள்ளார் எனவும் சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் சென்று பின்னர் வேறு விமானத்தில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு போலி பயண ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமான முறையில் கனடா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பட்டியலை இந்த கைதும் சேர்க்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...