rtjy 246 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் மேற்கு பகுதிகளில் கரையொதுங்கும் ஆமை சடலங்கள்

Share

இலங்கையின் மேற்கு பகுதிகளில் கரையொதுங்கும் ஆமை சடலங்கள்

நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரைப் பகுதியில் மூன்று நாட்களுக்குள் சுமார் 20 ஆமை சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ கடற்பகுதிகளில் இருந்து இந்த ஆமை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வனவிலங்கு திணைக்களம் பல ஆமைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த ஆமைகள் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) இறந்த அனைத்து ஆமைகளும் ஒரே அளவு மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் கடற்பகுதிகளில் உள்ள நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...