rtjy 206 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

Share

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

பாதாள உலகக்குழுவின் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கோத்தா அசங்க ஆகியோர் பாதுகாப்புப்படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் முற்பட்டபோது, ​​அவர்கள் 2018 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தனர்.

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சகா கோட்டா அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்கு அவர்களின் ஆதரவாளர்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய பாதுகாப்புப்படையினர் இருவரையும் கைது செய்தததாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....