நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள பௌத்த மதகுருமார்!
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள பௌத்த மதகுருமார்!

Share

நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள பௌத்த மதகுருமார்!

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவசேனையின் மறவன்புல சச்சிதானந்தன் உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், குருந்தூர் மலையில் இடம்பெறுவது தனியான ஒரு சம்பவமில்லை மாறாக அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழர்கள் சார்ந்த பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு நீண்டகால தந்திரோபாயமே முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது வடக்கு-கிழக்கின் குடிசன பரம்பலை மாற்றுவது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது உட்பட பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தந்திரோபாயமே முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்காக தொல்பொருள் திணைக்களம், இராணுவம் பௌத்த மதகுருமார்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

இந்து வலதுசாரி அமைப்பான சிவசேனையின் மறவன்புல சச்சிதானந்தன் போன்றவர்கள் அரசாங்கத்தின் இந்த மூலோபாயத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கின்றனர்.

இந்த குழுக்களிற்கு ஆதரவளித்து கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் தமிழர்கள் இதனை கருத்தில்கொள்ள வேண்டும்.

இந்த விடயம் குறித்து கரிசனையற்றவர்கள் பௌத்த மதகுருமார் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதையும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

இது நீதித்துறையின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்படாத நீதி அமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....