இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி
இலங்கைசெய்திகள்

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

Share

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் கொடுனரான சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பில் உதவும் என்று பீடிஐ தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள், வெளி மற்றும் உள் கடன்களான 41 பில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கான சவால் எதிர்கொள்ளப்படும் நிலையில் சீனா இலங்கைக்கு உதவ உள்ளதாக பீடிஐ குறிப்பிட்டுள்ளது.

2.9 பில்லியன் டொலர்களில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட நிதியுதவியை வழங்குவதற்காக, இந்த ஆண்டு செப்டம்பர் 11 முதல் 19 வரையான காலத்தில் சர்வதேச நாணய நிதியம் அதன் முதல் மதிப்பாய்வை நடத்த உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கான நிபந்தனையை பூர்த்தி செய்ய இலங்கை தற்போது அதன் வெளி கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஜூன் மாத இறுதி வரை நிகழ்ச்சித் திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, முதல் மதிப்பாய்வில் நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள் இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால், இலங்கைக்கு சுமார் 338 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்றும் பீடிஐ தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...