உலக பொருளாதார சுட்டியில் பின்தள்ளப்பட்ட இலங்கை
இலங்கைசெய்திகள்

உலக பொருளாதார சுட்டியில் பின்தள்ளப்பட்ட இலங்கை

Share

உலக பொருளாதார சுட்டியில் பின்தள்ளப்பட்ட இலங்கை

இலங்கையில் நுகர்வோரின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது உலக தரப்படுத்தலில் 131 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் Numbeo என்ற கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை நுகர்வோரின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது 2013 இல் உலகில் 90 ஆவது இடத்திலிருந்து 10 வருடங்களுக்குள் 131 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டளவில் கோவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக இலங்கை 112 வது இடத்தில் இருந்ததாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

மேலும், 30 மாதங்களுக்குப் பிறகு, 131 வது இடத்திற்கு தீவிரமாக இலங்கையின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் நுகர்வோரின் தேவையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் இது நிகழ்ந்துள்ளது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சுட்டெண்ணின் படி, அண்டை நாடான இந்தியாவில் நுகர்வோரின் கொள்வனவு வளர்ச்சி வீதமானது உலகில் 45 வது இடத்திலும், பங்களாதேஷ் 107 வது இடத்திலும், பாகிஸ்தான் 114 வது இடத்திலும், காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...