ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை

Share

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய செயற்பட தவறும் ஆசிரியர்களது சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய செயல்படுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த உத்தரவுகளை கருத்தில் கொள்ளாது தாம் முன்னர் பணியாற்றிய பாடசாலைகளிலே தொடர்ந்தும் சிலர் பணியாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் சில ஆசிரியர்கள் சேவை நிமித்தம் தற்பொழுது கற்பிக்கும் பாடசாலைகளில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு அனுமதிக்குமாறு சில அதிபர்கள் கோரியுள்ளனர்.

அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவ்வாறான பாடசாலைகளில் இருந்து பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...