ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை

Share

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய செயற்பட தவறும் ஆசிரியர்களது சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இடமாற்ற உத்தரவுகளுக்கு அமைய செயல்படுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த உத்தரவுகளை கருத்தில் கொள்ளாது தாம் முன்னர் பணியாற்றிய பாடசாலைகளிலே தொடர்ந்தும் சிலர் பணியாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் சில ஆசிரியர்கள் சேவை நிமித்தம் தற்பொழுது கற்பிக்கும் பாடசாலைகளில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு அனுமதிக்குமாறு சில அதிபர்கள் கோரியுள்ளனர்.

அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவ்வாறான பாடசாலைகளில் இருந்து பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...