தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்

Share

தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் நேற்று (16.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் வடக்கில் இராணுவத்தினர் வசம் குறைந்தபட்ச அளவிலான காணிகள் காணப்படுகின்றன. பிரிவினைவாதம் வடக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றதால் ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,812 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் 22,919 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 85 சதவீதமானரை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு காணப்படுகிறதே தவிர அப்பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கல்ல, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமை அகற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

‘இராணுவ முகாமை அகற்றினால் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும்,இப்பகுதி போதைப்பொருள் வியாபாரிகள்,சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கொலனியாகும்’ஆகவே முகாமை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி தமிழ் மக்கள் இராணுவ தலைமையகத்துக்கு மனுக்களை சமர்ப்பித்துள்ளார்கள்.”என கூறியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...