கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளி கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தெடர்பில் மேலும் கூறுகையில்,“பயிற்சி இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படுவதுடன் அதற்கான பணி விரைவாக ஏற்பாடு செய்யப்படும்.

ஐந்து பிரிவைச் சேர்ந்த முன்பள்ளி பிள்ளைகள் தரம் 1 க்கு வருகிறார்கள். ஒரு முன்பள்ளி அனைத்து செயற்பாடுகளையும் கற்றுத் தருகிறது. சில முன்பள்ளிகள் பத்துக்குள் எண்களைக் கற்றுக்கொடுக்கிறது. மற்றொன்று நூறுக்குள் எண்களைக் கற்றுக்கொடுக்கிறது.

இவ்வாறு கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் தரம் ஒன்றிற்கு வருகின்றார்கள்.

இப்போது ஜப்பானில், இவை அனைத்தையும் கற்பிக்கிறார்கள். அவ்வாறான ஒரு முறைமையை நடைமுறைப்படுத்தவே இரண்டு வருட முன்பள்ளிக்கான வேலைக் கட்டமைப்பை தேசிய கல்வி அல்லது சர்வதேச தரத்தின்படி உருவாக்க வேண்டும்.

அதனால்தான் அடுத்த வாரம் குழந்தைகள் விவகார அமைச்சகம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளேன்.”என கூறியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...