விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்
இலங்கைசெய்திகள்

விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்

Share

விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 இறக்குமதி கார்களை விடுவிப்பதாக கூறி மூவரிடம் 62 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த மோசடி சம்பவத்தில் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (10.08.2023) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை, அலோபோமுல்ல, அருக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பல பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வருபவர் எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் இருப்பதாகவும் மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...