விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்
இலங்கைசெய்திகள்

விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்

Share

விசாரணையில் சிக்கிய அழகுகளை நிபுணர்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 இறக்குமதி கார்களை விடுவிப்பதாக கூறி மூவரிடம் 62 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த மோசடி சம்பவத்தில் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (10.08.2023) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை, அலோபோமுல்ல, அருக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பல பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வருபவர் எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் இருப்பதாகவும் மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...