மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி

Share

மட்டக்களப்பில் பெண்ணிடம் நூதனமான முறையில் மோசடி

மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு அமெரிக்காவிலிருந்து பெருந்தொகையான பணத்தை பெறப்போவதாக ஆசை காட்டி மோசடி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் “உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர்” என குறித்த பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்களுக்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பி பொதியொன்றை ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பொதியில் 70 ஆயிரம் டொலர், தங்க ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பாசலில் அனுப்ப முடியாது இது சட்டவிரோதமானது எனவே இந்த பொதியை சுங்கதிணைக்களத்தில் இருந்து விடுவிக்க 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தேவை என தெரிவித்துள்ளார்.

மேலும் பொதியில் உள்ள 70 ஆயிரம் டொலரை காணொளி எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய குறித்த பெண் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் 95 ஆயிரம் ரூபாவை அனுப்பியுள்ளார்.

பின்னர் சுங்க திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்துள்ளார்.

அண்மை காலமாக வெளிநாட்டில் இருந்து பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாகவும் இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலச்சம் தொடக்கம் 6 இலச்சம் ரூபாவரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர்.

எனவே இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 8cb8563933
செய்திகள்இலங்கை

கண்டி மெததும்பரையில் சோகம்: நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவரால் கத்திக்குத்து – 7 பேர் காயம்!

கண்டி மாவட்டம், மெததும்பர (Medadumbara) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அன்று...

HIV 1200px 22 10 26 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு: ஆண்களை மையமாகக் கொண்ட தொற்றுகள் உயர்வு – 2009க்குப் பின் உச்சம்!

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுகள் கணிசமாக...

1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...