வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!

Share

வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு கடல்வழியாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றபோது 55 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு 07-08-2023 எடுத்துக் கொள்ளப்பட்ட போது 32 பேர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அதனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 10 மாத கால சாதாரண சிறை தண்டனை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார்.

தண்ட பணத்தை அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் விதிக்கப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...