யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

Share

யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.

எனினும் தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் என்ற அடிப்படையில் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்திற்கான தூரம் 110 கிலோமீட்டர்களாகும்.

எனவே நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலில் சென்றால் வெறும் 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை அடைந்துவிடலாம் என கூறப்படுகிறது.

Share

7 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....