50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு
இலங்கைசெய்திகள்

50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு

Share

50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு

இறக்குமதி செய்யப்பட்ட 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டது.

மனித பாவனைக்கு பொருந்தாத சுமார் 80,000 டின் மீன்கள் மீள்பொதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வத்தளை – ஹெந்தலை பகுதியில் நேற்று (05.08.2023) சனிக்கிழமை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அவசர சோதனை பிரிவு அதிகாரிகள் குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான பாசுமதி உள்ளிட்ட பல்வேறு வகையான அரிசி வகைகளின் உற்பத்தி செய்யப்பட்ட திகதி மற்றும் காலாவதியான திகதிகளை மாற்றி புதிய பொதிகளுக்கு மாற்றீடு செய்து சந்தைக்கு விநியோகம் செய்வதற்கு தயாராக இருந்தபோது மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை பருப்பு வகை மற்றும் கொத்தமல்லியையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் அவற்றில் காணப்பட்ட பூச்சி இனங்களை இல்லாமல் செய்வதற்கு மனித உடலுக்குப் பொருந்தாத பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

களஞ்சியசாலையில் உள்ள உணவுப் பொருட்களின் பெறுமதி 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் குறித்த பொருட்கள் அனைத்தும் கொழும்பு – நான்காம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன் குறித்த களஞ்சியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...