போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்
இலங்கைசெய்திகள்

போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்

Share

போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்

தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும்; மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன,

30 வருடகால யுத்தம் தமிழ் மக்களுக்கு பாரிய உயிரிழப்புக்களையும், பொருளாதார அழிவுகளையும் விளைவித்திருக்கிறது. இதற்கு காரணமான காரண கர்த்தாக்களது முகத்திரைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கிழிப்பேன்.

இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு தான் நிலவுகின்றது என்றால், இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களால் சகோதரர்களாக நடத்தப்படாமல் மாற்றான் தாய் மக்களாக கொல்லப்படுவது ஏன்? இவை தொடர்பான உண்மைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்துவேன்.

இவர்களால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான கொலைகளின் 27900 படங்கள் என்னிடம் இருக்கிறது. மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகள் தொடர்பான காணொளிகள் என்னிடம் இருக்கிறது.

அதனை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்க நான் தயார். அதற்கு எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். அவற்றை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது என்னுடைய கடமையாகும்.

01.09.2021 அன்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உடனடியாக விசாரைணகளை ஆரம்பிக்கும் படி நான் சமர்ப்பித்த போர் இரகசிய விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...