வவுனியா இரட்டை கொலை!! பிரதான சந்தேகநபரை விசாரிக்க சிஐடிக்கு உத்தரவு
இலங்கைசெய்திகள்

வவுனியா இரட்டை கொலை!! பிரதான சந்தேகநபரை விசாரிக்க சிஐடிக்கு உத்தரவு

Share

வவுனியா இரட்டை கொலை!! பிரதான சந்தேகநபரை விசாரிக்க சிஐடிக்கு உத்தரவு

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய சிஐடிக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழு வீட்டு உரிமையாளர் மீது வாளால் வெட்டிவிட்டு வீட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் இளம் குடும்ப பெண் மூச்சு திணறல் காரணமாகவும் அவரது கணவன் தீயில் எரிந்தமை காரணமாகவும் மரணமடைந்திருந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிஐடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தே நபராக கருத்தப்படும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02.08.2023) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (03.08.2023) குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய சிஐடியினர் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியநிலையில், சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இன்று (03.08.2023) குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினர் நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முன்னிலைப்படுத்தி பொலிஸ் விசாரணைக்குட்டபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(02.03.2023) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...