tamilni 6 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி

Share

யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நான்கு கோவில்களை உடைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரின் வங்கிக் கணக்குகளில் சுமார் மூன்று கோடி ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள நான்கு பிரதான கோவில்களில் கொள்ளையடிப்பதற்காக இந்த கொள்ளையன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னர் கொழும்பு திரும்பிய அவர், மீண்டும் ஆலயம் ஒன்றில் கொள்ளையடிக்க யாழ்ப்பாணம் சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் உள்ள காட்சிகளின் உதவியுடன் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...